Connect with us

தமிழ்நாடு

பிரச்சார களத்தில் இறங்கிய விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

Published

on

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரேமலதா உட்பட 40 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென எல்கே சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது பிரேமலதா மட்டுமே தனியாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்றும் நாளை கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த், திருத்தணியில் பிரச்சாரத்தை முடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் குதிக்க உள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?