தமிழ்நாடு
பிரச்சார களத்தில் இறங்கிய விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!
வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரக் களத்தில் இறங்க உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது. அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரேமலதா உட்பட 40 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென எல்கே சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பிரேமலதா மட்டுமே தனியாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சார களத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஜயகாந்த் நாளை முதல் 5 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்றும் நாளை கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜயகாந்த், திருத்தணியில் பிரச்சாரத்தை முடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் குதிக்க உள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.