சினிமா செய்திகள்
10 வருடம் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்தது இதற்காகத்தான்: மனம் திறந்த தளபதி விஜய்!
தளபதி விஜய் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை தற்போது மனம் திறந்து விளக்கியுள்ளார்.
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரமோஷனில் ஒன்றாக சன் டிவிக்கு அவர் பேட்டியளித்தார்.
இந்தப் பேட்டி வரும் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியின் புரமோ வீடியோக்கள் அவ்வப்போது சன் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி வரும் நிலையில் சற்றுமுன் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன் என்பதற்கு விஜய் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமின்றி தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு முக்கிய அறிவுரையும் கூறி உள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன்? ரசிகர்களுக்கு கூறிய அறிவுரை என்ன? என்பதை வரும் 10ஆம் தேதி முழு பேட்டியில் பார்ப்போம்.
Rasigargalukku naan enna solla virumburen-na…
–@actorvijayVijay-yudan Nerukku Ner | April 10 | 9 PM @Nelsondilpkumar #SunTV #VijayyudanNerukkuNer #VNNOnSunTV #ActorVijay #BeastSpecial #Beast pic.twitter.com/LQfDUsexni
— Sun TV (@SunTV) April 5, 2022