தமிழ்நாடு
சொத்து வரியை அடுத்து வாகனப்பதிவு கட்டணம் உயர்வு: ரூ.2500ல் இருந்து ரூ.10,000 என உயர்ந்ததால் அதிர்ச்சி!
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமீபத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சொத்து வரியை அடுத்து தற்போது வாகன பதிவு சான்றிதழ், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், தங்கம் உள்பட அனைத்து பொருட்களும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக வாகன பதிவு உள்ளிட்ட கட்டணமும் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் வாகன பதிவு மற்றும் வாகனம் சான்றிதழ் பெறுவதற்கான புதிய கட்டண விபரங்கள் இதோ:
* 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.600ல் இருந்து ரூ.5 ஆயிரம் என உயர்வு
* இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு
* ஆட்டோக்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 என உயர்வு
இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ல் இருந்து ரூ.10 ஆயிரம் என உயர்வு
இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.40 ஆயிரம் என உயர்வு