Connect with us

தமிழ்நாடு

சொத்து வரியை அடுத்து வாகனப்பதிவு கட்டணம் உயர்வு: ரூ.2500ல் இருந்து ரூ.10,000 என உயர்ந்ததால் அதிர்ச்சி!

Published

on

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமீபத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டது என்பதும் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சொத்து வரியை அடுத்து தற்போது வாகன பதிவு சான்றிதழ், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், தங்கம் உள்பட அனைத்து பொருட்களும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக வாகன பதிவு உள்ளிட்ட கட்டணமும் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் வாகன பதிவு மற்றும் வாகனம் சான்றிதழ் பெறுவதற்கான புதிய கட்டண விபரங்கள் இதோ:

* 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.600ல் இருந்து ரூ.5 ஆயிரம் என உயர்வு

* இருசக்கர வாகனங்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1,000 என உயர்வு

* ஆட்டோக்களுக்கான வாகன பதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 என உயர்வு

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ல் இருந்து ரூ.10 ஆயிரம் என உயர்வு

இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.40 ஆயிரம் என உயர்வு

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?