இந்தியா
மீண்டும் களத்தில் இறங்கிய வாவா சுரேஷ்: 12 அடி நாகப்பாம்பை பிடித்து சாதனை!
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி மீண்டும் களத்தில் இறங்கி 12 அடி நீள கொடூரமான விஷத்தன்மை கொண்ட நாக பாம்பை பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியில் குடியிருப்பு பகுதியில் திடீரென 12 அடி நீள ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற வாவா சுரேஷ் அந்த ராஜநாக பாம்பை அலேக்காக தூக்கி சாக்கு பையில் போட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்ட போது தான் உயிர் உள்ளவரை மீண்டும் பாம்பு பிடிக்கும் பணி செய்வேன் என்று கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் களத்தில் இறங்கி குடியிருப்பு பகுதியில் பாம்பை பிடித்து சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.