Connect with us

இந்தியா

மீண்டும் களத்தில் இறங்கிய வாவா சுரேஷ்: 12 அடி நாகப்பாம்பை பிடித்து சாதனை!

Published

on

குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி மீண்டும் களத்தில் இறங்கி 12 அடி நீள கொடூரமான விஷத்தன்மை கொண்ட நாக பாம்பை பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியில் குடியிருப்பு பகுதியில் திடீரென 12 அடி நீள ராஜநாகம் ஒன்று புகுந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற வாவா சுரேஷ் அந்த ராஜநாக பாம்பை அலேக்காக தூக்கி சாக்கு பையில் போட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்ட போது தான் உயிர் உள்ளவரை மீண்டும் பாம்பு பிடிக்கும் பணி செய்வேன் என்று கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் களத்தில் இறங்கி குடியிருப்பு பகுதியில் பாம்பை பிடித்து சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?