இந்தியா
என்னை சிறையில் அடையுங்கள்: முதல்வர் ஆவேச பேச்சு!
என்னை சிறையில் தள்ளுங்கள் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறவினர்கள் வீட்டில் திடீரென ரெய்டு நடத்தப்பட்டுவருவது குறித்து ஆத்திரமடைந்த உத்தவ் தாக்கரே என்னை சிறையில் அடையுங்கள் என்றும் என் உறவினர்கள் வீட்டில் ரெய்டு செய்ய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:
நீங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் வாருங்கள். ஆனால் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக அனைத்து மோசமான விஷயங்களையும் செய்யாதீர்கள்.. எங்களுடைய, யாருடைய குடும்ப உறுப்பினர்களையும் துன்புறுத்தாதீர்கள். உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் குறித்து எப்போதுமே நாங்கள் கவலைப்பட்டதில்லை.
அதிகாரத்துக்கு வருவதற்காக எங்களைச் சிறையில் தள்ள விரும்புகிறீர்கள் என்றால், என்னை சிறையில் தள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.