வணிகம்
உத்திர பிரதேசத்தில் வருமான வரித் துறையினரால் தேடப்பட்ட நொறுக்குத் தீனி விற்பனையாளர்!
உத்திர பிரதேசத்தில் கச்சோரி என அழைக்கப்படும் நொறுக்குத் தீனியை விற்கும் விற்பனையாளரை வருமான வரித் துறையினர் தேடியுள்ளனர்.
கச்சோரி விற்பனையாளரான முகேஷ் குமார் உத்திர பிரதேசத்தின் அலிகார் பகுதியில் தனது வியாபாரத்தை செய்து வந்துள்ளார்.
இவரது வணிகத்தின் மூலம் ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளது. ஜிஎஸ்டி படி ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வியாபரம் செய்யும் வணிகர்கள் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.
ஆனால் இவர் ஜிஎஸ்டி பதிவு செய்யாமலேயே வியாபாரம் செய்து வந்துள்ளார். முகேஷ் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு வணிகர்கள் இதே போன்று வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.