தமிழ்நாடு
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை துவக்கிய சிபிஐ!
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையும் தொடங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதமாற்றத்திற்கு தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தஞ்சை மாணவியை லாவண்யாவின் வழக்கை சிபிஐக்கு மாற்றி சமீபத்தில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது என்பதும் இந்த மேல்முறையீட்டு வழக்கில் லாவண்யா வழக்கை சிபிஐ விசாரிக்க எந்தவித தடையுமில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது என்பது தெரிந்ததே.
இதனையடுத்து இந்த வழக்கை கையில் எடுக்க சிபிஐ ஆரம்பகட்ட பணிகளை செய்த நிலையில் தற்போது இந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் யார்? உண்மையாகவே மாணவி லாவண்யாவை மதமாற்றத்தில் ஈடுபடும் வைக்க முயற்சி நடந்ததா? என்பதை சிபிஐ விரைவில் கண்டு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.