இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.03.2026

- எக்ஸ் தளத்தில் இந்திய பயனர்கள் ஆபாச வீடியோக்கள் புகைப்படங்களை பார்க்க பதிவிட தடை விதிப்பு. – இந்திய ஐடி விதிகள் 2021ன்படி இது அமலுக்கு வந்துள்ளது. புக்மார்க்குகள் திடீரென மாயமானதால் பயனர்கள் பலரும் அதிர்ச்சி.
- போர் பதற்றம் காரணமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல வேண்டியவர்கள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். சரியான நேரத்திற்கு வேலைக்குத் திரும்ப முடியாததால் பலர் தங்களது வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் இக்கட்டில் உள்ளனர். இதனால் இந்திய பொருளாதாரத்திலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்விலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
- அணைத்து வகையான உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது ஈரான் அரசு. மறு அறிவிப்பு வரை தடை நீடிக்கும்.
- குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 200 முறை சிரிக்கிறார்கள். பெண்கள் சுமார் 62 முறை சிரிக்கிறார்கள். ஆனால் ஆண்கள் மட்டும் ஒரு நாளில் 8 முறைதான் சிரிக்கிறார்கள். என்று ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு சிறிய சிரிப்பு கூட மன அழுத்தத்தை குறைத்து நம்மையும் நம்மை சுற்றியவர்களையும் மகிழ்ச்சியாக மாற்றும் சக்தி கொண்டது.
- இன்றைய தங்கம் விலை – கிராம் ஒன்றுக்கு ரூ.265 குறைந்து கிராம் ரூ.15200க்கும் ஒரு சவரன் ரூ.121600க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 குறைந்து கிராம் ரூ.295க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.295000க்கும் விற்பனை ஆகிறது.
- பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும்பாலான குடிமக்களுக்கு விவாகரத்து சட்டபுர்வமாக அனுமதிக்கப்படவில்லை. வாடிகனும் விவாகரத்தை தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காலரணம் அங்கு உள்ள கத்தோலிக்க மதத்தின் தாக்கம். அங்கு திருமணம் என்பது புனிதமான வாழ்நாள் உறவாக கருதப்படுவதால் அதை எளிதாக முடிக்க சட்டம் இடம் தராது.
- ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக கடும் வீழ்ச்சி.சென்செக்ஸ் 1449.75 புள்ளிகள் சரிந்து 78771.53 க்கும் நேிஃப்டி 477.55 குறைந்து 24389.35க்கும் வர்த்தகமாகிறது.
- இரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள் நோயாளிகள் பயன்படுத்தும் பேட்டரி கார்கள் ஒப்பந்ததாரர் நிதி நிறுவுனத்துக்கு பணம் கட்டவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே உடனே தலையிட்டு மாற்று ஏற்பாட்டினை உறுதி செய்ய பயணிகள் கோரிக்கை.
- திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்தி பெயர் – அணைத்துக் கட்சியினர் கண்டனம்
- ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் ஜெர்மனி ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் பங்பேற்க போவதில்லை என்று அறிவிப்பு.












