தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டில் மகிழ்ச்சி அறிவிப்பு.. அகவிலைப்படி 4% அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசு புத்தாண்டு தினத்தன்று அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக அகவிலைப்படியை 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதனால் அரசு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவிகிதத்திலிருந்து 38 சதவிகிதமாக அதிகரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இந்த அகவிலைப்படி 2023, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அகவிலைப்படி என்பது நாட்டில் ஏற்படும் விலைவாசி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக வழங்கப்படுவதாகும். விலைவாசி எப்போது எல்லாம் உயருகிறதோ அப்போது எல்லாம் அகவிலைப்படியும் உயரும்.