தமிழ்நாடு
குழந்தையை தாக்கிய பெண்ணின் கள்ளக்காதலன் அதிரடி கைது!

செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய கள்ளக்காதலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவழகன் என்பவர் துளசி என்ற பெண்ணை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்செயலாக ஒரு நாள் துளசியின் செல்போனை பார்த்த வடிவழகன் அவருடைய மொபைலில் தனது ஒன்றரை வயது குழந்தையை துளசி கடுமையாக அடித்த வீடியோ இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் துளசி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட துளசிக்கு முதலில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவர் மனநலம் தெளிவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் துளசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கணவர் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மணிகண்டனை காவல்துறையினர் தேடி வந்தனர். மணிகண்டனை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு மணிகண்டனுடன் கள்ளக்காதல் இருந்ததை துளசி ஒப்புக் கொண்டார் என்பதும் கள்ளக்காதலை விட முடியாததால் கணவர் மீது உள்ள கோபத்தில் குழந்தையை தாக்கியதாகவும் துளசி வாக்குமூலம் கொடுத்தார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசாரிடம் மணிகண்டன் இன்று சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தன்னை பிரேம்குமார் என துளசியிடம் அறிமுகம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

















