இந்தியா
காதலியை சந்திக்க வந்த இளைஞருக்கு வாயில் சிறுநீர்: கிராம மக்கள் ஆத்திரம்!
ராஜஸ்தானில் தனது காதலியை இரவில் பார்க்க வந்த காதலனை பிடித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து வாயில் சிறுநீரை ஊற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது காதலியை சந்த்திக்க பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு இளைஞன் இரவு நேரத்தில் சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த இளைஞன் அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் கையும் களவுமாக பிடிபட அவர்கள் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
தொடர்ந்து தாக்கிய அந்த கும்பல், பிடிபட்ட இளைஞனின் வாயில் சிறுநீர் ஊற்றி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரிடம் இருந்து புகார் பெற்ற போலீசார் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் அந்த கிராமத்து பெண் அளித்த புகாரின்படி, இளைஞரின் மீதும் போக்சோ சட்டப்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.