Connect with us

தமிழ்நாடு

3 மாநில வனத்துறை அதிகாரிகள், 9வது நாளாக தேடுதல் வேட்டை: அகப்படாத T-23 புலி!

Published

on

கூடலூர் அருகே உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஆட்கொல்லி புலியை பிடிக்க மூன்று மாநில வனத்துறை அதிகாரிகள் 9 நாட்களாக தேடி வரும் நிலையில் இன்னும் அந்த புலி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக T-23என்று அழைக்கப்படும் புலி ஒன்று கால்நடைகள் மற்றும் மனிதர்களை வேட்டையாடி வரும் நிலையில் அந்த புலியை படிப்பதற்காக தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 75 வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில் அந்த புலியை பிடிப்பதில் தொடர்ச்சியாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தும் மயக்க ஊசி போட்டும் அந்த புலியை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் ட்ரோன் மூலமும் புலியை தேடும் பணியும் நடந்து வருகிறது என்பதும் சிப்பிபாறை நாய் மூலமும் புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை நான்கு மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்று குவித்து உள்ள ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வனத்துறை அதிகாரி உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

புலி நடமாட்டம் காரணமாக சிங்கார, மசினகுடி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்வதற்கு கமல்ஹாசன் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் புலியை உயிருடன் பிடிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?