Connect with us

சினிமா செய்திகள்

எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் தற்கொலை செய்து கொண்ட நடிகை: தியாகராஜன் கூறிய திடுக் தகவல்

Published

on

எம்ஜிஆர் பேச்சை கேட்காததால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தியாகராஜன் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த் நடிப்பில் உருவாகிவரும் அந்தகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தியாகராஜன். இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தியாகராஜன் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு எம்ஜிஆர் அறிவுரை கூறியதாகவும் ஆனால் அந்த அறிவுரையை அவர் ஏற்க வில்லை என்றும், அதனால் அவரது முடிவு தற்கொலையில் முடிந்தது என்றும் கூறியுள்ளார் .

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக சில்க் ஸ்மிதா நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டபோது சில்க் ஸ்மிதா ஒரு மிகச் சிறந்த நடிகை என்றும், அவர் குணசித்திர கேரக்டரில் கவனம் செலுத்தலாம் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை நிறுத்திவிடலாம் என்று எம்ஜிஆர் அப்போது அறிவுரை கூறினார்.

அவரது அறிவுரையின்படி குணசித்திர கேரக்டரை சில்க் ஸ்மிதா ஃபாலோ செய்து இருந்தால் அவருடைய திரை உலக வாழ்க்கை உச்சத்திற்கு சென்று இருக்கும் என்றும் ஆனால் அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால் அவரது வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் வரை சென்று விட்டது என்றும் தியாகராஜன் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?