சினிமா செய்திகள்
அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன்: தனுஷை மறைமுகமாக தாக்கிய இயக்குனர்!

அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன் என தனுஷை மறைமுகமாக தாக்கிய இயக்குனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே கார்த்திக் நரேன் இயக்கினார் என்றும் அதன் பிறகு தனுஷ் தலையீடு அதிகமாக இருந்தது என்றும் ஒரு கட்டத்தில் தனுஷ் தான் இந்த படத்தை இயக்கினார் என்றும் கூறப்பட்டது .
இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் தனுஷ் படத்திலேயே மிக மோசமான விமர்சனங்களை பெற்ற படம் இது தான் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஒரு படத்தின் இயக்குனர் என்ற முறையில் இந்த படத்தின் தோல்வி அனைத்தையும் சுமந்து வரும் கார்த்திக் நரேன் அடுத்த படத்தில் நான் யார் என்பதை நிரூபிப்பேன் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.
தனுஷ் தலையீடு அதிகமாக இருந்ததால்தான் மாறன் திரைப்படம் தோல்வியில் முடிந்ததாகவும் இந்த படத்தின் உண்மையான கதையை வேறு என்றும் அவர் நெருங்கிய வட்டாரங்களில் புலம்பிக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.
திடீரென தங்கை சென்டிமென்ட், காதல் , கடத்தல் என தனுஷ் கதையை மாற்றி விட்டார் என்றும் உண்மையான கதையில் அப்படியெல்லாம் இல்லை என்றும் முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாளருக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படத்தின் கதையாக இருந்தது என்றும் அவர் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

















