Connect with us

தமிழ்நாடு

ஈபிஎஸ் தரப்பை மிரள வைத்த ஓபிஎஸ் தரப்பின் டுவிஸ்ட் வாதம்!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கூறி வழக்கை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

#image_title

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. இதில் பல்வேறு வாதங்களை முன்வைத்தது ஓபிஎஸ் தரப்பு. ஆனால் ஈபிஎஸ் தரப்பு சற்றும் எதிர்பார்க்காத சில வாதங்களை முன்வைத்ததாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த வாதங்கள் கூட தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைய வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பின் முக்கிய வாதங்கள் பின்வருமாறு:

* விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர்.

* இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கும், கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கும் விரோதமானது.

* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.

* தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாக ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை.

* பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கி, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். தொண்டர்கள் முடிவெடுக்கட்டும்.

இந்த வாதம் தான் ஈபிஎஸ் தரப்பு எதிர்பார்க்காத வாதமாக கூறப்படுகிறது. இரு தலைவர்களும் மாறி மாறி தலைமை பொறுப்புக்கு மோதிக்கொள்ளும் இந்த சூழலில் இதனை தொண்டர்கள் மத்தியில் விட்டுவிட்டு நீதிமன்றமே தலையிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தினால் என்ன? என்ற நிலைக்கு இந்த வாதம் கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி அப்படி சொல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்21 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா21 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!