தமிழ்நாடு
ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருகிறார்… அவரை நீக்கியதற்கு காரணம் இது தான்… எடப்பாடி தரப்பு அதிரடி வாதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு அதிரடியான பதில் வாதத்தை முன்வைத்து வருகிறது.

#image_title
அதில், கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 நடந்த பொதுக்குழுவில் ஒபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும் அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்தால் தான் அவர்களை நீக்கினோம் என ஈபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. மேலும், ஓபிஎஸ் தனக்கென தனிக்கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தரப்பு தான் உண்மையான கட்சி என்றால், தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு வாதிட்டுள்ளது.