இந்தியா
அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியின் பெயர் பரிந்துரை… தமிழிசை அதிரடி!

டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய சுகாதார திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயரை பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.










