தமிழ்நாடு
மருத்துவ கல்லூரி டீன் காத்திருப்பு பட்டியல்: முதல்வருக்கு மருத்துவர் சங்கம் கடிதம்
நேற்று மதுரையில் மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற போது சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் கடும் அதிருப்தி அடைந்த தமிழக அரசு, மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றியது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை எழுதி உள்ளது .
அந்தக் கடிதத்தில் சமஸ்கிருத உறுதிமொழி என்பது தேவையற்றது என்பதை ஏற்கனவே தமிழக மருத்துவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்றும் ஆனால் தற்போது அந்த கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு என்பது எந்தவித உள்நோக்கத்துடன் நடத்தப்படவில்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த இந்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எந்தவித உள்நோக்கம் இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்வுக்கு முதல்வரை பொருப்பாக்கி அவரை இந்த பதவியிலிருந்து இறக்கி வைத்திருக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது .
இந்த கடிதத்தை அடுத்து மதுரை மருத்துவ கல்லூரியின் டீன் ஆக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.