Connect with us

இந்தியா

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு..!

Published

on

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை கடும் சர்வில் இருக்கும் நிலையில் இது குறித்து விசாரிக்குமாறு செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவையும் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் இந்திய பங்குச்சந்தை மட்டும் இன்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் அதானி குழும நிறுவனங்களின் நிலைமையை விசாரித்து முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் இந்த விசாரணையை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உற்று நோக்குவார்கள் என்பதால் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளது.

மேலும் செபிக்கு 3 முக்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முதலாவதாக பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிமுறைகளின் வரை சரியாக அமைந்துள்ளதா என செபி விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தின் படி செபிக்கு தொடர்புடைய தரப்பினர்களுடன் தொடர்புடைய கட்சிகளுடன் பரிவர்த்தனை மற்றும் பிற தகவல்களையும் வெளியிடுவதில் செபி தோல்வி அடைந்ததா என்பதை விளக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சட்டங்களுக்கு முரணாக பங்குகளின் விலை கையாளப்பட்டுள்ளதா என்பதை குறித்து செபி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளிலும் விசாரணை செய்ய செபிக்கு உரிமை உண்டு என்றும் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செபி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்கிறோம் என்றும் பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளதால் செபி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

சினிமா11 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா12 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு12 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா12 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு13 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு13 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா13 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா13 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா13 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்18 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

வேலைவாய்ப்பு7 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!

வேலைவாய்ப்பு7 days ago

டிகிரி முடித்தவர்களுக்கு IBTRD-யில் வேலைவாய்ப்பு!