சிறு தொழில்
புதிய ஸ்டார்ட் அப் தொழில் தொடங்க உங்களுக்கு ரூ.10 இலட்சம் தமிழக அரசு தந்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா…

கடன் கிடையாது… சும்மாவே தர்றாங்க… யாரு தராங்க? நம்ம தமிழ்நாடு அரசுதான் தருகிறது.. எல்லாருக்குமா? இல்லை … சரியான முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கம்… எப்படி? எந்த அடிப்படையில் தருவாங்க?
நீங்கள் செய்யப்போகும் தொழில் எல்லோரும் வழக்கமாக செய்யம் தொழிலாக இருக்கக் கூடாது.. உங்க ஸ்டார்ட் அப் புதிய தீர்வையோ அல்லது கண்டுபிடிப்புகளையோ வழங்க வேண்டும்.
பெரிய நிறுவனங்களின் ஒரு பகுதியாக இருப்பதோ அல்லது அவர்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதோ கூடாது.
கடந்த மூன்று ஆண்டுகளில் உங்களுக்கு 5 லட்சத்திற்கு மேல் லாபம் வந்திருக்கக் கூடாது.
முதலில் நீங்கள் Pvt. Ltd., LLP (Limited Liablility Partnership) அல்லது பதிவு செய்யப்பட்ட பங்குதாரர் நிறுவனம் ஆகியவற்றில் ஒருவராக இருக்க வேண்டும். DPIIT (Department of Promotion of Industry and Internal Trade) சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது இருந்தால் அணைத்து சரிபார்ப்புகளையும் அவர்களே செய்து விடுவார்கள்.
பிறகு https://startuptn.in/ என்ற இந்த தளத்தில் உங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நீங்கள் பதிவு செய்த உடன் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த குழுவினர் உங்களின் தொழிலை கண்டுபிடிப்பை அய்வு செய்வார்கள். இறுதியாக நடுவர்கள் குழு பத்து லட்சம் பெறும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இது பத்து லட்சத்தோடு நிற்காது. Headstart, Villgro போன்ற நிறுவனங்கள் உங்கள் தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக உதவி செய்வார்கள்.
உங்கள் தொழில் வேளாண்மை, பருவநிலை மாற்றத்திற்கான தீர்வு, உடல்நலம், வாழ்வாதாரம், மிக புதுமையான கண்டுபிடிப்பாக இருந்தால் 10 லட்சத்தை உடனே பெறலாம்.

















