Connect with us

சினிமா

ரமணியம்மாள் காலமானார்: கடைசி வரைக்கும் கஷ்டம்; சந்தோஷமா இருக்குற நேரம் பார்த்தா இப்படி ஆகணும்?

Published

on

ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் பாடகியாக பங்கேற்று ரன்னர் அப் ஆன ரமணியம்மாள் பாட்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமானார்.

66 வயதில் பாடகி ரமணியம்மாள் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்தே அவரது வாழ்க்கை வீணானது.

காதல் படத்தில் இடம்பெற்ற தண்டட்டி கருப்பாயி பாடல் மூலம் அவரது குரல் சினிமாவில் இடம்பெற்றாலும், அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் அவருக்கு வரவே இல்லை. எம்ஜிஆர் பாடல்கள் என்றால் கொள்ளை பிரியமாக வேலை செய்யும் போது அலுப்பு தெரியாமல் இருக்க பாடி வந்த இவரது குரலை கேட்டு அசந்து போன ஒரு வீட்டுக்காரர் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்று பாடுங்கள் என அவரை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

zee tamil

ஆரம்பத்தில் சின்ன பசங்களோடு நாம எப்படி போய் அசிங்கமா நின்னு பாடுறது, நம்மை எல்லாம் சேர்க்கவே மாட்டாங்க என நினைத்த ரமணியம்மாள் சரிகமப நிகழ்ச்சியில் கடைசி வரை டஃப் போட்டி கொடுத்து இரண்டாம் இடத்தை பிடித்தார். மக்கள் பலரும் இவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடைசியில் ரன்னர் அப் தான் கிடைத்தது.

அதற்கு பரிசாக 5 சென்ட் நிலத்தை திண்டிவனம் தாண்டி பல மாதங்கள் கழித்து அந்த பாட்டி பெரும் போராட்டத்தை சந்தித்தன் பின்னர் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

43 வருடங்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த ரமணியம்மாள் ஜுங்கா, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பாடி உள்ளார்.

சந்தோஷமாக இருக்க வேண்டிய காலத்தில் திடீரென இப்படி உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டாரே என பலரும் ரமணியம்மாள் மரணத்தை அறிந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?