இந்தியா
அதிர்ச்சி சம்பவம்: ஒரே கிணற்றில் ஆறு பெண்கள் பிணமாக!
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி காலா கிராமத்தில் ராணாராம் என்பவர் அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பெயர் வேணு தேவி. இந்த தம்பதியர் 5 குழைந்தைகளை பெற்றுள்ளனர். இந்த ஐந்து குழந்தைகளும் பெண் பிள்ளைகளே. இதனால் ஒரு ஆண் மகன் கூட இல்லையே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார் வேணு தேவி.
இதனையடுத்து கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் வேணு தேவி விரக்தியில் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் தனது ஐந்து பெண் பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் அந்த கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து 6 பெண் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.