ஆன்மீகம்
சனி ஜெயந்தி 2025: அதிர்ஷ்டமும் ராஜ யோகமும் பறக்கும் இந்த 3 ராசிக்காரர்கள் – செல்வ வசூல், பதவி உயர்வு வாய்ப்பு!

சனி ஜெயந்தி 2025 – இந்த புனித நாளில் சனி பகவானை வழிபட்டால், அவர் அருளால் வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படும். வைகாசி அமாவாசை நாளான இன்று சனி ஜெயந்தி நாடு முழுவதும் பக்தி பரவலாக கொண்டாடப்படுகிறது.
சனி பகவான் கிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்தவராகும். அவரின் அருள் கிடைத்தால், வாழ்க்கையில் வளர்ச்சி, மகிழ்ச்சி, நிதி செழிப்பு, மன அமைதி எல்லாம் கூடும். அதேசமயம், சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற கிரக தோஷங்களும் குறையும்.
இந்த சனி ஜெயந்தி தினம் கீழ்கண்ட ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிஷ்டநாளாக அமையும்:
ரிஷபம் (Taurus):
சனி பகவானின் சாதகமான தாக்கம் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் சகல விதமான பிரச்சனைகள் குறையும். முக்கியமான வேலைகள் அனுகூலமாக நிறைவேறும். புதிய வருமான வாய்ப்புகள் தோன்றும். உடல்நலம் மேம்படும், நிதி நிலை வலுப்படும்.
துலாம் (Libra):
தொழில் மற்றும் பணியிடத்தில் சிக்கல்கள் இருந்தாலும், இப்போது அதற்குத் தீர்வு காண வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு, வேலை மாற்றம், அல்லது வெளிநாட்டு வாய்ப்புகள் கிட்டும். சனி பகவானின் அருளால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
மகரம் (Capricorn):
மகர ராசிக்காரர்களுக்கே சனி அதிபதி, எனவே இந்த சனி ஜெயந்தி உங்களுக்கு அருமையான பலன்களை தரும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து வாங்கும் சந்தர்ப்பம் போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடக்கக்கூடும். வருங்காலம் மிகவும் சாதகமாக அமையும்.
அறுசுவை வழிபாடுகள்:
சனி பகவானின் அருளை பெற கீழ்கண்ட மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்:
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்
கோளறு பதிகம்
சனி சாலிசா
அனுமான் சாலிசா
இந்த சனி ஜெயந்தியில் சனி பகவானை நம்பிக்கையுடன் பூஜிப்பவர்கள் வாழ்க்கையில் ராஜ யோகம் போன்ற அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
















