Connect with us

சினிமா செய்திகள்

21 ஆண்டுகளுக்குப் பின் கம்-பேக் கொடுக்கும் ஷாலினி அஜித்… வரலாற்றுப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம்

Published

on

தல அஜித்-ன் மனைவியும் நடிகையுமான ஷாலினி 21 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன்னர் ஷாலினி கடைசியாக பிரியாத வரம் வேண்டும் என்னும் படத்தில் நடித்திருந்தார். அதே 2000-ம் ஆண்டு நடிகர் அஜித் உடன் காதல் திருமணத்தில் இணைந்த ஷாலினி அதன் பின்னர் சினிமா துறையைவிட்டு முழுவதுமாக விலகி விட்டார். அதன் பின்னர் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் சிறிது காலம் கவனம் செலுத்திய ஷாலினி தற்போது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி தமிழ் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். அதுவும் தனது ஆஸ்தான இயக்குநர் ஆன மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஷாலினி. இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தில் தான் முக்கியமான வரலாற்றுக் கதாபாத்திரமாக நடிக்க உள்ளார் ஷாலினி அஜித்.

மணிரத்னம் கேட்டுக் கொண்டாதாலேயே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஷாலினி ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தில் நாயகர்களாக ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?