Connect with us

தமிழ்நாடு

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போதை ஆசாமி ஆசிரியர் கைது!

Published

on

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

#image_title

மாதவரம் பகுதியை சேர்ந்த 46 வயதான பிரேம் ஆனந்த் என்பவர் வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான இரண்டு சிறுமிகள் இவரது வீட்டிற்கு சென்று படித்து வந்தனர்.

இதனையடுத்து இரண்டு நாட்களாக ஆசிரியர் பிரேம் ஆனந்த் தங்களிடம் முறையற்று நடந்து கொள்வதாகவும், தவறான இடங்களில் கை வைத்து கிள்ளுவதாகவும், அடிப்பதாகவும் சிறுமிகள் தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆசிரியர் பிரேம் ஆனந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், சிறுமிகளிடம் கண்ட இடங்களில் கை வைத்து தவறாக நடந்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?