சினிமா செய்திகள்
‘தி ஃபேமிலிமேன்’ வெற்றியால் சர்வதேச பட வாய்ப்பை பெற்ற சமந்தா!
சமீபத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் ‘தி ஃபேமிலிமேன்’ என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தமிழ் இயக்கங்கள் ஒருசில இந்த தொடருக்கும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும் பொதுமக்களால் இந்த தொடர் ரசிக்கப்பட்டது என்பதும் குறிப்பாக சமந்தாவின் கேரக்டர் மிக அபாரமாக உருவாக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘தி ஃபேமிலிமேன்’ வெற்றியை அடுத்து சமந்தாவுக்கு தற்போது சர்வதேச திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான இயக்குனர் பிளிப் ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள ’அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற திரைப்படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இது குறித்த ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
தி மெமரி இன் மெர்ராரி’ என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக இருப்பதாகவும் இருபால் சேர்க்கை உணர்வு கொண்ட தமிழ் பெண் கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
சர்வதேச அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்பதால் சமந்தாவுக்கு சர்வதேச அளவில் புகழ் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்த செய்தி தனது கருத்து தெரிவித்த சமந்தா ’அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்’ என்ற படத்தில் நடிப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் இந்த படத்தில் அனு என்ற கேரக்டரில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் பிளிப் ஜான் அவர்களுக்கு நன்றி என்றும் இந்த அற்புதமான பயணத்திற்காக நான் காத்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இயக்குனர் பிளிப் ஜான் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.