தமிழ்நாடு
மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ.1க்கு பிரியாணி: கட்டுக்கடங்காத கூட்டம்!

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு ரூபாய் ஒன்றுக்கு பிரியாணி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த கடையின் முன் கூட்டம் கூடி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்காக கொண்டாடப்படும் இந்த தினத்தை முன்னிட்டு பல கடைகளில் சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த உப்புக்கறி என்ற கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.30 மணியிலிருந்து 1 மணிவரை ஒரு மணி நேரம் மட்டுமே இந்த சலுகை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு பிரியாணி என்ற அறிவிப்பை அடுத்து அந்த கடையின் முன் தற்போது மிக அதிகமாக கூட்டம் இருந்து வருவதாகவும் அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதே போன்று சென்னை உள்பட பல நகரங்களில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி என அறிவிக்கப்பட்ட போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
















