Connect with us

இந்தியா

பிரியாணி தான் நம்பர் 1.. 2022ஆம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!

Published

on

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரியாணி என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் 2022ஆம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுப்பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகை எது என்பது குறித்த ஸ்விக்கி பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது என்று ஸ்விக்கி கூறுகிறது. இந்த ஆண்டு மட்டுமின்றி கடந்த 7 ஆண்டுகளாக பிரியாணி தான் முதலிடத்தில் உள்ளது என்றும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும் அதாவது ஒரு நொடிக்கு சுமார் 3 பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரியாணியை அடுத்து அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகை மசாலா தோசை என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. அதேபோல் தின்பண்டங்களை பொருத்தவரை 2022ஆம் ஆண்டில் சமோசா அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டதாகவும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 40 லட்சம் சமோசா ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் சமோசாவை அடுத்து அதிகமாக விற்பனையான தின்பண்டங்கள் என்றால் அது பாப்கான் என்றும் பெரும்பாலும் இரவு நேரங்களில் அதிக பாப்கான் ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் மக்களின் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்றாக குலோப்ஜாமுன் இருக்கிறது என்றும் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 27 இலட்சம் குலோப்ஜாமுன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?