Connect with us

இந்தியா

பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது: ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

Published

on

பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது .

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசியபோது, ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அணியை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது என்றும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் எனவே காங்கிரஸ் கட்சியுடன் மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும் அதனால் பாஜக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் நாம் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தி ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்றும் பாஜகவுக்கு எதிராக போராடுவதே நமது லட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?