இந்தியா

பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது: ராகுல் காந்தி ஆவேச பேச்சு!

Published

on

பாஜகவை எதிர்க்க மாநில கட்சிகளால் முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநாடு ஒன்று நடைபெற்றது .

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ராகுல்காந்தி பேசியபோது, ‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அணியை மாநில கட்சிகளால் வீழ்த்த முடியாது என்றும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்றும் எனவே காங்கிரஸ் கட்சியுடன் மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாட்டில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என்றும் அதனால் பாஜக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் நாம் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தி ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்றும் பாஜகவுக்கு எதிராக போராடுவதே நமது லட்சியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version