இந்தியா
இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும்: பல்டி அடித்த பிரசாந்த் கிஷோர்
இன்னும் 10 ஆண்டுகளுக்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அதை தவிர்க்க முடியாது என்றும் தேர்தல் வியூகம் மன்னன் கிஷோர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைத்து அந்த அணிக்கு தேர்தல் வியூகம் மன்னனாக பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று சில தலைவர்களின் திட்டமாக இருந்தது. குறிப்பாக மு க ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களின் எண்ணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆனால் சமீபத்தில் பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர், ‘நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் இருபது முதல் முப்பது வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்திய இந்திய அரசியல் சூழலும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
எந்த ஒரு கருத்தியலும் அல்லது விஷயமும் அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயமாக சரிவை சந்திக்கும் என்பது விதி என்றும் பாஜகவுக்கும் கடும் சரிவு ஏற்படும் என்றும் ஆனால் அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் அது நடைபெற வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார் .
வரும் அனைத்து தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று நான் கூறவில்லை என்றும், ஒன்று பாஜகவை ஆதரிக்க வேண்டும் அல்லது பாஜகவை எதிர்க்க வேண்டும், மாறாக பாஜகவை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் தான் இருந்தது என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.