தமிழ்நாடு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு-அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் அகவிலைப்படி குறித்த விவரங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
இதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதி உள்ள பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2002ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8894 கோடி ரூபாய் பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சர் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அரசுக்கு ஆண்டொன்றிற்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும், பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3,000 ரூபாய், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கிடவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், முன்னாள் கிராம நிருவாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாயும் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரசுக்கு தோராயமாக 169.56 கோடி ரூபாய் அளவிற்கு செலவினம் ஏற்படும். தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை உள்ள இந்தச் சூழ்நிலையிலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அகவிலைப் படியினை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிடவும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.