Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பதும் இருவரும் ரகசிய திருமணம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விஷ்ணு சிவன் ஆகிய இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரவுடிகள் பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்குவது ரவுடிகளை ஊக்கப்படுத்துவதாகும் என்று அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரவுடிகளை ஊக்கப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று விக்னேஷ் சிவன் தரப்பில் கூறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது அளிக்கப்பட்டிருக்கும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?