இந்தியா
பிக்சட் டெபாசிட்டுக்கு 8.10% வட்டி.. வாரி வழங்கும் வங்கி எது தெரியுமா?
பொதுவாக பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு 5 முதல் 6 சதவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளும் வட்டி வழங்கி வருகின்றன என்பதும், சமீப காலமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததன் காரணமாக ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
ஒரு சில வங்கிகள் தற்போது 7 சதவீதம் வரை வட்டி வழங்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி 8.10 சதவீதம் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு, ரிஸ்க் இல்லை உள்ளிட்ட காரணங்களால் பிக்சட் டெபாசிட் முதலீட்டை பலர் தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் பண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றில் ரிஸ்க் அதிகம் என்பதும், பிக்சட் டெபாசிட் முதலீட்டில் முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்பதும் அதில் முதலீடு செய்வதற்கு காரணமாக உள்ளது.
இந்த நிலையில் பிக்சட் டெபாசிட்டில் குறைந்த வட்டி என்பதால் தான் பலர் இதில் முதலீடு செய்யாமல் வேறு வகைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டில்லும் நல்ல வட்டி சதவிகிதங்கள் தருவதாக வங்கிகள் அறிவித்து வருகின்றன.
குறிப்பாக சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து ஸ்டேட் பேங்க் உள்பட பல வங்கிகள் வட்டி வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. ஒரு சில வங்கிகள் 7.5% வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது 666 நாள் டெபாசிட் செய்தால் 8.10 சதவீதம் வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டெபாசிட் திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த திட்டத்தை பற்றி விளக்கமாக பகிர்ந்துள்ளது.
சாதாரண பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்குவதை விட இந்த திட்டத்தில் கூடுதல் வட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் 666 நாட்கள் டெபாசிட் திட்டத்தில் இணைவதற்கு வங்கியின் அதிகாரபூர்வ இணையம் அல்லது செயலியை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஆண்டுகளுக்கு 8.10% வட்டி வழங்கப்படுகிறது என்றும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயரில் குறிப்பிடுவது போலவே 666 நாட்களில் முதிர்வு அடையும்போது வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் இருந்து தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கமாக 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்களுக்கு 6.10 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்கி வரும் நிலையில் தற்போது கிறிஸ்துமஸை முன்னிட்டு 8.10% வட்டி வழங்குவதால் இந்த அரிய வாய்ப்பை டெபாசிட் செய்பவர்கள் தங்கள் முதலீட்டு ஆலோசர்களிடம் கலந்து ஆலோசித்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.