Connect with us

சினிமா செய்திகள்

அஜித்-நயன் இணைவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் டுவிட்!

Published

on

அஜித் மற்றும் நயன்தாரா மீண்டும் திரையில் இணைவதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் என பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அஜீத் தற்போது 61வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் விரைவில் அவர் 62வது படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அனிருத் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைய உள்ளது சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும், அஜீத் மற்றும் நயன்தாரா ஐந்தாம் முறையாக இணைய உள்ளதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

அஜீத்துடன் நயன்தாரா ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. பாகிஸ்தான் பத்திரிகையாளரின் இந்த டுவிட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?