சினிமா செய்திகள்
அஜித்-நயன் இணைவதை பார்க்க ஆவலுடன் உள்ளேன்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் டுவிட்!
அஜித் மற்றும் நயன்தாரா மீண்டும் திரையில் இணைவதை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் என பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அஜீத் தற்போது 61வது படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் விரைவில் அவர் 62வது படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜீத், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அனிருத் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் அஜித்துடன் விக்னேஷ் சிவன் இணைய உள்ளது சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும், அஜீத் மற்றும் நயன்தாரா ஐந்தாம் முறையாக இணைய உள்ளதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அஜீத்துடன் நயன்தாரா ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. பாகிஸ்தான் பத்திரிகையாளரின் இந்த டுவிட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.