சினிமா செய்திகள்
ரூ.400 கோடிக்கு படத்தை கேட்ட ஓடிடி நிறுவனம்: மிஸ் செய்து நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்!
ரூபாய் 400 கோடிக்கு பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை விலைக்கு கேட்டபோது விற்க மறுத்து விட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்த பட தயாரிப்பாளருக்கு ரூபாய் 100 கோடி நஷ்டம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்பதால் ரூபாய் 100 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் திரையரங்கு ரிலீஸ் என்ற முடிவை எடுப்பதற்கு முன்னே முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று இந்த படத்தை 400 கோடி ரூபாய்க்கு கேட்டதாகவும் அதற்கு தயாரிப்பாளர் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் பட்ஜெட் 450 கோடி என்ற நிலையில் 50 கோடி நஷ்டத்திற்கு விற்க மனம் இல்லாமல் அவர் திரை அரங்குகளில் செய்ய முடிவு செய்தார். ஆனால் தற்போது இந்தப் படம் ரூ 100 கோடி அவருக்கு நஷ்டத்தை அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் ஓடிடி நிறுவனத்திற்கே விற்பனை செய்திருக்கலாம் என்று எண்ணுவதாக கூறப்படுகிறது.