Connect with us

தமிழ்நாடு

ரஜினியை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்: பின்னணி என்ன?

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் தேனி மக்களவை தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை, அங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.

ரவீந்திரநாத் குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்ற ஒரே ஒரு தொகுதி தேனி மட்டும் தான். இந்நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மோடியின் அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற பல யூகங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் எம்பி சான்றிதழை பெற்ற ரவீந்திரநாத் குமார் சென்னை வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ் மகன். இது அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது.

எனவே மோடியிடம் நெருக்கமாக உள்ள ரஜினியை சந்தித்து அமைச்சர் பதவியை பெறுவதற்காக தான் ஓபிஎஸ் மகன் சென்றதாக அதிமுக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. இது தொடர்பாக ஓபிஎஸும் பாஜக வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது. தனது மகனை மத்திய அமைச்சராக்காமல் ஓபிஎஸ் விடமாட்டார் என அதிமுகவினர் பேசுகின்றனர்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?