தமிழ்நாடு
டெல்லி செல்வது ஏன்? விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்வது ஏன் என்பது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு இன்று நடந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்து பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்றுமுன் அவர் டெல்லி புறப்பட்டார்.
அவருடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியநாதன் மற்றும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் டெல்லி சென்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்ததால் டெல்லி செல்கிறேன் என்று கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் இந்த பிரச்சினை குறித்து புகார் அளிக்கப் போவதாகவும் அதுமட்டுமின்றி இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.