Connect with us

உலகம்

ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் சிறுவர்களிடம் அதிகம் காணப்படுகிறது?

Published

on

omicron

கொரோனா 3-ம் அலை வந்தால் அது தடுப்பூசி இல்லாத, சிறுவர் சிறுமிகளை அதிக அளவில் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அதிகளவில் ஓமிக்ரான் தொற்று அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதுவரையில் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரம் ஓமிக்ரான் சிறுவர்களை மட்டும் தான் அதிகம் தாக்குகிறது என்பதற்கான தரவுகளும் இல்லை.

இருந்தாலும் சிறுவர்களுக்கு வரும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சிறுவர்களுக்குளுக்கு ஏற்படும் ஓமிக்ரான் கொரோனா தொற்று அறிகுறிகள்

பெரியவர்கள் மற்றும் வயதானவர்களைப் போன்று சிறுவர்களுக்கும் பல்வேறு கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லோருக்கும் ஒன்றாகவே உள்ளது.

காய்ச்சல், சோர்வு, இருமல் மற்றும் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு போன்றவை கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகள். அதுவே சிறுவர்களைத் தாக்கும் போது இதயம், நுரையீரல், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள், செரிமான அமைப்பு, மூளை, தோல் அல்லது கண்கள் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஓமிக்ரான் தொற்றைப் பொறுத்த வரையில், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு க்ரூப் எனப்படும் கடுமையான, குரைக்கும் இருமலுக்கு வழிவகுக்கலாம் என சமீபத்திய ஆய்வு தகவல்கள் கூறுகின்றன.

ஓமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் சிறுவர்கள் நெருக்கமாக இருந்து தொற்று பாதிப்பு ஏற்பட்டால், மேல் சுவாசக் குழாயில் தொற்று ஏற்பட்டு குரூப்புக்கு வழிவகுக்கிறது என கூறுகின்றனர்.

அமெரிக்காவில் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள்

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் கொரொணா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்ற ஒரு நிலை தென் ஆப்ரிக்காவிலும் ஓமிக்ரான் அதிகளவிலிருந்த போது ஏற்பட்டுள்ளது. ஆனால் டெல்டா தொற்றை விட ஓமிக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?