Connect with us

தமிழ்நாடு

கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிசாமி

Published

on

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று பெண் காவலர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவலர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள புதிய உத்திகளை கையாளுவதற்கு பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் பயிற்சி தருவதற்கு கமிட்டி போட்டு நேரத்தை வீணாக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

திருநெல்வேலி பழவூரில் ஊரில் பெண் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தியவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் முதல் காவலர் வரை தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐயை தொலைபேசியில் அழைத்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பெண் காவலரின் உயர் சிகிச்சைக்கு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?