Connect with us

தமிழ்நாடு

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது: பள்ளிக்கல்வித்துறையின் அதிர்ச்சி அறிவிப்பு!

Published

on

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வரும் நிலையில் இது குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல என்றும், தற்காலிகமானதே என்றும், எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இன்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது என்றும் பணி நிரவல் ஆணை பெற்ற உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.

உபரி பட்டதாரி ஆசிரியர்கள் அதே பள்ளியில் பணியாற்றினால் முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பில் உள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கு உபரி பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?