Connect with us

இந்தியா

ரூ.3200 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை, இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்.. உழைப்பால் உயர்ந்த ரேணு..!

Published

on

3200 சம்பளத்தில் தனது நடுத்தர வாழ்க்கையை தொடங்கிய ரேணு என்ற பெண் இன்று 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம் 18 ஆண்டுகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

ரேணு குஜ்ரால் என்பவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். இவர் ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனத்தில் படிக்கவில்லை. ஆனாலும் கல்வியில் மிகவும் சிறந்தவராக விளங்கினார் என்பதும் இவர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ரூ.3200 சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார்.

இந்த நிலையில் 3200 சம்பளத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது என்று முடிவு செய்துகொண்ட ரேணு, கடந்த 2005 ஆம் ஆண்டு மூன்று ஊழியர்களுடன் ஈஸி சோர்ஸ் ஹெச்ஆர் சொல்யூஷன்ஸ் என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இவரது கணவர் வேறு ஒரு நிறுவனத்தின் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவர் தனது வேலையை விட்டுவிட்டு தனது மனைவியை நிறுவனத்தில் சேர்ந்தார்.

இந்த நிறுவனம் முன்னனி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம், பிஎப், பணியாமர்த்தல் மற்றும் பணிநீக்கல் ஆகிய வேலைகளை கையாண்டனர் என்பதும் இந்த நிறுவனத்திற்கு தற்போது 500 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2005 ஆம் ஆண்டு வெறும் 3 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 70க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் மற்றும் 12 ஆயிரம் அவுட்சோர்ஸ் ஊழியர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.202 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

3200 சம்பளத்தில் வேலை பார்த்த ரேணு அதன்பின் தைரியமாக வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலை தொடங்கினார். இருப்பினும் நிறுவனம் ஓரளவு வளர்ச்சி அடையும் வரை அவரது கணவர் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். நிறுவனம் வளர்ச்சி அடைய தொடங்கியவுடன் கணவரும் இணைந்து கொண்டார் என்பதும் அதன் பின் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பன்மடங்காக பெருகியதாகவும் பேட்டி ஒன்றில் ரேணு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவரது இவர்களது ஒரே மகன் அப்பல்லோ டயர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரேணு முழுக்க முழுக்க தனது கடின உழைப்பின் மூலமே இந்த வெற்றியை பெற்று இருக்கிறார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்2 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்1 மாதம் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?