இந்தியா
ரூ.3200 சம்பளத்தில் தொடங்கிய வாழ்க்கை, இன்று ரூ.200 கோடிக்கு சொந்தக்காரர்.. உழைப்பால் உயர்ந்த ரேணு..!

3200 சம்பளத்தில் தனது நடுத்தர வாழ்க்கையை தொடங்கிய ரேணு என்ற பெண் இன்று 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம் 18 ஆண்டுகளில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
ரேணு குஜ்ரால் என்பவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். இவர் ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனத்தில் படிக்கவில்லை. ஆனாலும் கல்வியில் மிகவும் சிறந்தவராக விளங்கினார் என்பதும் இவர் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த பின்னர் ரூ.3200 சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார்.
இந்த நிலையில் 3200 சம்பளத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது என்று முடிவு செய்துகொண்ட ரேணு, கடந்த 2005 ஆம் ஆண்டு மூன்று ஊழியர்களுடன் ஈஸி சோர்ஸ் ஹெச்ஆர் சொல்யூஷன்ஸ் என்ற பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இவரது கணவர் வேறு ஒரு நிறுவனத்தின் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவர் தனது வேலையை விட்டுவிட்டு தனது மனைவியை நிறுவனத்தில் சேர்ந்தார்.
இந்த நிறுவனம் முன்னனி நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம், பிஎப், பணியாமர்த்தல் மற்றும் பணிநீக்கல் ஆகிய வேலைகளை கையாண்டனர் என்பதும் இந்த நிறுவனத்திற்கு தற்போது 500 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டு வெறும் 3 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 70க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்கள் மற்றும் 12 ஆயிரம் அவுட்சோர்ஸ் ஊழியர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.202 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
3200 சம்பளத்தில் வேலை பார்த்த ரேணு அதன்பின் தைரியமாக வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலை தொடங்கினார். இருப்பினும் நிறுவனம் ஓரளவு வளர்ச்சி அடையும் வரை அவரது கணவர் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். நிறுவனம் வளர்ச்சி அடைய தொடங்கியவுடன் கணவரும் இணைந்து கொண்டார் என்பதும் அதன் பின் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி பன்மடங்காக பெருகியதாகவும் பேட்டி ஒன்றில் ரேணு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவரது இவர்களது ஒரே மகன் அப்பல்லோ டயர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரேணு முழுக்க முழுக்க தனது கடின உழைப்பின் மூலமே இந்த வெற்றியை பெற்று இருக்கிறார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.