Connect with us

தமிழ்நாடு

காதலர் தினம் கொண்டாட காசு இல்லை: ஆடு திருடிய இளைஞர்கள்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது அதிகபட்சமாக இளைஞர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் 2 இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாட காசு இல்லாததால் ஆடு திருடிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

#image_title

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் தனது வீட்டருகே ஆடு பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஆடுகள் கத்த ஆரம்பித்துள்ளன. இதனால் சத்தம் கேட்டு எழுந்த உரிமையாளர் வெளியே வந்து பார்த்தபோது இரண்டு வாலிபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை மட்டும் திருடி மோட்டர் பைக்கில் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உரிமையாளர் திருடன், திருடன் என பலமாக சத்தம் எழுப்பியுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அருகில் உள்ளவர்கள், ஆடு திருடிய அந்த இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் செஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இருபது வயதே ஆன இந்த இரண்டு வாலிபர்களும், பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட கையில் காசு இல்லாததால், ஆடு திருடி விற்று அதில் வரும் காசை கொண்டு காதலர் தினத்தை கொண்டாட இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் ஆடு திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?