Connect with us

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு இதுவரையில் நிதியே விடுவிக்கப்படவில்லை.. தெரியுமா?

Published

on

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட நிதியே ஒதுக்கப்படவில்லை என் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இதுவரையில் எவ்வளவு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என கேள்வி கேட்டுள்ளார்.

அவருக்கு வந்த ஆர்டிஐ பதிலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட, ஜப்பான் சர்வதேச கார்ப்ரேஷன் ஏஜென்சி உடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், மருத்துவமனையின் மொத்த மதிப்பீடு 1,621 கோடி ரூபாயில் அவர்களது பங்களிப்பாக இதுவரையில் ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு எய்ம்ஸ் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பிற செலவுகளுக்காக 18 சதவிகித பணத்தை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்திருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவிகிதம் வரை முடிந்துவிட்டது. விரைவில் பிரதமர் மோடி நாட்டுக்கு அதனை அர்ப்பணிக்க உள்ளார் என தெரிவித்து இருந்தார்.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல் மற்றும் சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த பணிகளும் நடைபெறவில்லை என காங்கிரஸ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விடியோ ரிலீஸ் செய்தனர்.

உடனே எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 95 சதவீத ஆவணப் பணிகள் முடிவடைந்துள்ளது என தான் ஜேபி.நட்டா தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 2026-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?