Connect with us

செய்திகள்

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்…மதுரை நீதிமன்றம் உத்தரவு….

Published

on

girl

அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள் அவரை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜக தரப்பில் கூறி அது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டது. இது தொடரபாக நீதி கேட்டு பாஜக போராட்டமும் நடத்தியது.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை மறும் காவல்துறை தரப்பில் நடத்திய விசாரனையில் மத மாற்றம் தொடர்பான எந்த பிரச்சனையும் லாவண்யாவுக்கு இல்லை என தெரிய வந்தது. பாஜகவின் கருத்து மாணவியின் பெற்றோர்களே ஏற்கவில்லை. மேலும், சிறுமியின் கிராமத்தில் வசிக்கும் ஊர்கார மக்களும் ஏற்கவில்லை. மேலும், மத மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் சிறுமி தற்கொலை செய்தார் எனக்கூறுமாறு சிலர் தங்களை மிரட்டுவதாக அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், திடீரென வெளியான ஒரு வீடியோவில் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்றும் சகாயமேரி என்பவர் வேலை வாங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் சிறுமி கூறியதாக செய்தி வெளியானது.இந்த குழப்பம் நீடித்து வரும் நிலையில், தன் மகளின் மரணத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?