செய்திகள்
நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது. எனவே, இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரோனா படிப்படியாக குறைந்தது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியுள்ளது. அதன்படி, நர்சரி, மழலையர் விளையாட்டு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் எல்.கே.ஜி,யுகேஜி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் செயல்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.