செய்திகள்
கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்களுக்கு கொரோனா – சென்னையில் அதிர்ச்சி…
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
ஒருபக்கம் ஊரடங்கில் பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக காவல் துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பெண் கூடுதல் ஆணையர் உட்பட 70 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு காவல்துறையினருக்கு சென்னை காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.