செய்திகள்
வாயில் பரோட்டா…. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…. பரிதாப மரணம்…..
மரணம் இயற்கையானது என்றாலும் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் சூழ்நிலையில் மரணம் ஏற்படுகிறது. உலகமெங்கும் அதிகம் பேர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். சிலருக்கு தூக்கத்தில் மாரடைப்பு வரும். சிலருக்கு உடற் பயிற்சி செய்யும் போது, அலுகத்தில் பணியில் இருக்கும் போது, வீட்டில் ஹாயாக டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது என எப்போது மாரடைப்பு எப்போது வரும் என யாருக்கும் தெரியாது.
இந்நிலையில், ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டிக்கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் ஒருவர் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வாயில் பரோட்டா இருக்கும் நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
எனவே, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் அவரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் பெயர் தாமோதரன் என்பது, அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.