செய்திகள்
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை
ஏற்கனவே, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதேபோல், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இன்று காலை அறிவித்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் நாளை (நவ.18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.