Connect with us

சினிமா செய்திகள்

பதிவான வாக்குகளை விட அதிகம்: நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Published

on

பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது .

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என சென்னை ஐகோர்ட் தடை உத்தரவுப் பிறப்பித்த நிலையில் சமீபத்தில் தான் இந்த வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது .

இதனை அடுத்து இன்று காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கிய நிலையில் இந்த பதவிக்கால பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் அதிகமாக இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

டுணைத் தலைவர் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருந்த நிலையில் ஐந்து வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருந்ததால் ஐசரி கணேஷ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?